புது தில்லி: கிழக்கு தில்லியில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தனது பெற்றோருடன் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010-ல் சோனு என்ற சிறுவன் இரண்டு பெண்களால் கடத்தப்பட்டான். கடத்தப்பட்ட சிறுவன் தில்லியில் இருந்து பங்களாதேஷ் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் விசாரிக்கையில் சிறுவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. பின்பு, பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஜமால் இன் மூசா என்பவர் பெரும் சிரமப்பட்டு பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் சிறுவனைத் தனது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளார்.
பர்குனா மாவட்டம் நீதிமன்றம் மூலம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறுவனை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்பின்பு கூடுதல் மாவட்ட நீதிபதி அபு தாஹர் மனிதாபிமான அடிப்படையில் ஒரு லட்சம் டாகா (வங்காள நாணயம்) வழங்கி இந்திய தூதரக அதிகாரிகளிடம் சோனுவை ஒப்படைத்தனர். அதன்பின்பு இன்று தில்லியை அடைந்தான் சிறுவன் சோனு.
இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது....
சிறுவனை பத்திரமாக காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோனு தன் பெற்றோருடன் அனுப்பப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.