முகப்பு
இந்தியா

டெங்கு, சிக்கன்குனியா நோய்க்கு மக்கள் பீதியடைய வேண்டாம்: ஜேபி நட்டா தகவல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 14 செப்டம்பர் 2016, 3:28 pm IST
பகிர்:

புது தில்லி: தலைநகரில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா நோய்க்கு பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

தில்லியில் சிக்கன்குனியா மற்றும் டெங்கு நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிக்கன்குனியா நோய் பற்றி மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் தில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கங்கா ராம் மருத்துவமனையில் சிக்கன்குனியா நோய்க்கு இதுவரை ஐந்து பேர் பலியானதாக டாக்டர் ஆர்.எஸ்.ரத்னா கூறியுள்ளார். சிக்கன்குனியா ஒன்றும் உயிர்க்கொல்லி நோய் அல்ல. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், பணியாளர்களுக்குப் பயிற்சி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தொடர்பாகவும் அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதனால் யாரும் இந்நோய்கள் குறித்துப் பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments