நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்: ஷாருக்கானை கிண்டலடித்த அம்பானியின் மகன்!
நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் ..
மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-ஆம் ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் திருபாய் அம்பானியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானும் ஒருவர். அவர் அந்நிகழ்வின் பொழுது, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்திடம் உரையாடினார். அப்பொழுது அவர் ஆனந்திடம், 'எனது முதல் சம்பளம் 50 ரூபாய்.உன்னுடையது?' என்று வினவினார்.
Advertisement
Advertisement
அதற்கு ஆனந்த்.'வேண்டாம், விட்டு விடுங்கள்; நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்' என்று கிண்டலாக பதிலளித்தார்.
இதன் காரணமாக அந்த அவையே சிரிப்பில் மூழ்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.