இந்தியா

திருமலைக்கு கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

திருமலைக்கு கடத்த முயன்ற 35 மதுபாட்டில்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது :
திருமலைக்கு மது பாட்டில்கள் கடத்தப்பட இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார், கண்காணிப்புத்துறை ஊழியர்களுடன் இணைந்து கடந்த 2 நாள்களாக அலிபிரி சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் மது பாட்டில்களை மறைத்து வைத்து திருமலைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரிலிருந்த 35 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக திருப்பதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரகுநாத்தை (42) போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT