இந்தியா

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-38 ராக்கெட்

DIN

ஹைதராபாத்: பி.எஸ்.எல்.வி சி-38 ராக்கெட் 31 செயற்கைக்கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) காலை 9.29 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் சதீஷ் தவண் ஆய்வு மையத்தில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவின் சார்பில் கார்டோசாட் 2 செயற்கைக்கோள் என 712 கிலோ எடைக்கொண்ட 31 செயற்கைக்கோள்களை ராக்கெட் சுமந்து சென்றது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றியுள்ளது.

பூமியை துல்லியமாக கண்காணிக்கவும் தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்த கார்டோசாட் வகை செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. ,கார்டோசாட்-2சி, கார்டோசாட்-2டி செயற்கைகோள்களை இஸ்ரோ அமைப்பு விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.

இப்போது, அந்த வரிசையில் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்புகிறது. கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்ட 7-வது செயற்கைக்கோள் ஆகும்.

இந்தச் செயற்கைக்கோளில் நிலப் பகுதியை துல்லியமாக படம் பிடிக்க 3 நவீன கேமராக்கள், தொலையுணர் கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

பூமியிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் 505 கிலோ மீட்டர் உயர்த்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT