பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி ஒருவர், விழாவில் நடனமாடிய பெண்ணின் மீது பணத்தை வாரி இறைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கடந்த மார்ச் 10-ம் தேதி பிகார் மாநிலம் கயாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகி அருண் தாத்புரி பங்கேற்றார்.
அந்த விழாவில் நடனமாடிய பெண்ணுடன் சேர்ந்து ஆபாசமாக நடனமாடினார். பின்னர், அவர் கையில் கத்தை கத்தையாக வைத்திருந்த பணத்தை அந்தப் பெண்ணின் மீது அர்ச்சனை போல் வாரி இறைத்துள்ளார். ஒரு கட்டத்தில் தவறாக நடக்க முயன்ற அவரை, அங்கிருந்தவர்கள் கீழே இறக்கிவிட்டுள்ளனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி நிர்வாகியின் இந்தச் செயலால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.