இந்தியா

மின்னல் தாக்கி 100 வீடுகள் எரிந்து நாசம்

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட புழுதிப் புயல் காரணமாக மின்னல் தாக்கி 100 வீடுகள் எரிந்து நாசமாயின.

Raghavendran

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை புழுதிப் புயல் தாக்கியது. அப்போது இடி, மின்னலுடன் பெய்த கன மழையில் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்புரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவத்தில் தீயணைக்கம் பணியில் 3 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT