இந்தியா

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த போலிஸ் டிஎஸ்பி தற்கொலை

PTI


திருவனந்தபுரம்: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஹரிகுமார் கல்லம்பாலம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நவம்பர் 5ம் தேதியன்று வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சனல் என்ற 32 வயது இளைஞரை, டிஎஸ்பி ஹரிகுமார் தள்ளிவிட்டதில் அவர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்தார் ஹரிகுமார். அவரது குடும்பத்தினரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், ஹரிகுமார் அவரது வீட்டுக்கு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கேரள காவல்துறை கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT