இந்தியா

பணமதிப்பிழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்: ஒப்புக் கொண்ட மத்திய அரசு

DIN


இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய வேளாண் துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கையில் பணமில்லாமல் பருவ மழை காலத்தில் வேளாண்மைக்குத் தேவையான விதைகளையும், உரங்களையும் வாங்க முடியாமல் அவதிபட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் பணப் பரிமாற்றத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விற்க முடியாமலும், தேவைப்படும் விதை, உரங்களை வாங்க முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.

பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கூட, பணி ஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT