இந்தியா

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் வீட்டில் சோதனை: பணம், நகைகள் பறிமுதல்

DIN


திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதுட்டூரைச் சேர்ந்த சுதாகர் யாதவ் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது கடப்பா மாவட்டம், மைதுகூறு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கான வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். 
இந்நிலையில், பொதுட்டூரில் உள்ள அவர் வீட்டில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பெருமளவில் பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 ஆந்திர மாநிலத்தில் வரும் 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

SCROLL FOR NEXT