இந்தியா

சமாஜ்வாதியில் இணைந்த சத்ருகன் சின்ஹா மனைவி: ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக போட்டி?

DIN


சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி தலைவர் டிம்பிள் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

பாஜக எம்பியும் அக்கட்சியின் அதிருப்தியாளருமான சத்ருகன் சின்ஹா அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அவரது மனைவி பூனம் சின்ஹா இன்று (செவ்வாய்கிழமை) சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். 

பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலையில் இணைந்தார். 

அவர், லக்னௌ நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

லக்னௌவில் போட்டியிடுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் நேரடியாக பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

லக்னௌ தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். லக்னௌ தொகுதிக்கு மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT