இந்தியா

144 தடை உத்தரவு வாபஸ்: ஜம்முவில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதையடுத்து ஜம்முவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

DIN

144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதையடுத்து ஜம்முவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது. நேற்று மசூதிகளில் தொழுகை நடத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

இதையடுத்து ஜம்மு பகுதியில் கடந்த ஆக.5 முதல் நடைமுறையில் இருந்த தடை உத்தரவை ரத்து செய்து ஜம்மு மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ஆக.10 முதல், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதையடுத்து ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

எனினும், போராட்டங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT