மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ததைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாஜக-வின் சிறைச்சாலைகளை கண்டு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சமாட்டார்கள். எந்த சிறையையும் சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்கிறார்கள். மத்திய பாஜக அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரத்தை கைது செய்திருப்பதைக் கண்டித்து அனைத்து, மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை (ஆக. 22) வியாழக்கிழமை நடத்தும் படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.