இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து புதிய ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியா வருகை

DIN

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தன.

இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சினூக் ரக 15 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்டு, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த 15 ராணுவ ஹெலிகாப்டர்களில் முதல்கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் குஜராத்தில் உள்ள முந்த்ரா விமான நிலையத்துக்கு வந்தடைந்தன.

பலவகை பயன்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகை ஹெலிகாப்டர்கள் முதல்கட்டமாக சீனா, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பயன்பாடு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT