இந்தியா

புல்வாமா தாக்குதல் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது: ரா அமைப்பின் முன்னாள் தலைவர்

தினமணி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதித் திட்டம் உள்ளது என இந்திய உளவு அமைப்பான "ரா'வின் முன்னாள் தலைவர் விக்ரம் சூட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கோர தாக்குதல் ஒரு நபர் செய்யக்கூடிய காரியமல்ல. இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய குழுவே செயல்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இல்லாமல் இவ்வளவு பெரிய தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்க முடியாது. பயங்கரவாதிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) பயணத் திட்டங்களை நன்கு அறிந்து அதன்படி செயல்பட்டுள்ளனர். என்னைப் பொருத்தவரை புல்வாமா தாக்குதல் தனிநபரால் நடத்தப்பட்டது அல்ல. அதன் பின்பு நிச்சயம் ஒரு பெரிய குழுவே செயல்பட்டிருக்க வேண்டும்.
 புல்வாமா தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி தர வேண்டும் என்று கூறப்படுகிறது. குத்துச் சண்டை போட்டியில் நடைபெறுவது போல, ஒரு வீரர் குத்து விட்டதும் மறுபடியும் பதிலடி தருவது போன்றதல்ல புல்வாமா சம்பவம். பிரதமர் கூறியது போல, அதற்கான தகுந்த நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்வது பாதுகாப்பு படையினரின் கைகளில்தான் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT