மத்தியில் ஆளும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சத்ருகன் சின்ஹாவுக்கு மீண்டும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று பிகார் மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சத்ருகன் சின்ஹா, சொந்த கட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறி வந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான கருத்துகளை முன் வைத்தார்.
திடீரென, பாட்னாவில் மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்த மோடியை பாராட்டி சத்ருகன் சின்ஹா கருத்துக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சத்ருகன் சின்ஹா யு டர்ன் அடித்தாலும், பாஜகவில் போட்டியிட அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று கட்சித் தலைவர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.