மும்பை: ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுபோன்று பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
தவறும் பட்சத்தில், மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.