இந்தியா

ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியில் கையெறி குண்டு வீசித் தாக்குதல்: போக்குவரத்துக் காவலர்கள் 3 பேர் காயம்

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் போக்குவரத்து காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராஜ்பாக் சாலையில் ஜீரோ பிரிட்ஜ் அருகே உள்ள சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கையெறி குண்டை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், 3 போக்குவரத்து காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆவார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைத் தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT