ஜன. 27-இல் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
கோவா மாநில பாஜக தொண்டர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார். கோவா மாநில பாஜக வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்களுடன் பிரதமர்
கோவா மாநில பாஜக தொண்டர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார். கோவா மாநில பாஜக வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாட இருப்பது இது 2-ஆவது முறையாகும்.
இதுதொடர்பாக கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கு கோவா நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாநில தலைநகர் பனாஜியில் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூட உள்ளனர். அவர்களிடம் காணொளி காட்சி மூலமாக பிரதமர் உரையாட உள்ளார்.
மேலும், பனாஜியின் மண்டோவி நதியில் மூன்றாவது பாலத்தை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக, தெற்கு கோவா, சதாரா உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் ஜனவரி 20-ஆம் தேதி காணொளி காட்சி வழியாக மோடி உரையாடினார். அதைத் தொடர்ந்து வடக்கு கோவா தொண்டர்களுடன் உரையாற்ற உள்ளார்.