ஹரியானா முன்னாள் முதல்வர் பிஎஸ் ஹூடா மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, அவரது ரோஹ்தக் வீட்டில் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளது.
நில ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடு செய்தக் குற்றச்சாட்டின் கீழ் புபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளது.
இன்று காலை ஹூடாவின் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எனினும், வழக்கு விவரம் குறித்தோ சோதனை குறித்தோ சிபிஐ அதிகாரிகள் ஊடகங்களுக்கு எந்தத்தகவலையும் அளிக்கவில்லை.