இந்தியா

கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல்: 8 பேர் கைது

கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகளை எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

DIN

கேரளாவுக்கு கடத்த முயன்ற 26 அரிய வகைப் பறவைகளை எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

முன்னதாக, மிசோராமில் உள்ள கம்ரங் எனுமிடத்தில் அரிய வகைப் பறவைகள் கேரளாவுக்கு கடத்தப்பட உள்ளதாக அப்பகுதி வருவாய் ஆணையர் மற்றும் எல்லையோரப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு நடத்திய தேடுதல் வேட்டையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 26 அரிய வகைப் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.28 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் மிசோராமைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT