இந்தியா

காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கி சண்டையில்  2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் நமது ராணுவ வீரர்கள். 

இந்நிலையில், புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் உள்ள மிர் மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்துகொண்ட பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். 

இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் முன்னேறி பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை குண்டு வீசி தகர்த்தனர். இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், 2 பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 பேர் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரால் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT