இந்தியா

காங்கிரஸில் இணைந்த பகுஜன் சமாஜ் தலைவர் படுகொலை: எம்எல்ஏ கணவர் மீது வழக்குப்பதிவு

DIN

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் காங்கிரஸில் இணைந்த மூத்த அரசியல் தலைவர் தேவேந்திர சௌரஷியா வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் தாமோ எனுமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் அவரது மகன் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாமோ தொகுதி பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராம் பாய் கணவர் கோவிந்த் சிங் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT