முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி இன்று வாராணசி பயணம்

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி 27ஆம் தேதி (திங்கள்கிழமை) வாராணசி செல்கிறார். 

Updated On : 27 மே 2019, 2:12 am IST
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி 27ஆம் தேதி (திங்கள்கிழமை) வாராணசி செல்கிறார். 
அதற்கு முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார். 
வாராணசியில் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் முதல் குறுகலான  வீதிகள் வரை ஊர்வலமாக சென்று வாராணசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். 
இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். 
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுரேந்திர சிங், மாவட்ட எஸ்.பி.ஆனந்த் குல்கர்னி ஆய்வு மேற்கொண்டனர். 
துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
மக்களவைத் தேர்தலில், வாராணசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றபின் முதன்முறையாக வாராணசி வருகை தருவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments