இந்தியா

பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாக உள்ளது: என்எஸ்ஜி விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) 35-ஆவது நிறுவன தினம் ஹரியாணாவின் மனேஸாரில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 

DIN

பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) 35-ஆவது நிறுவன தினம் ஹரியாணாவின் மனேஸாரில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியதாவது:

பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாகவும், வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆட்சி, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்றுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் போர் காரணமாக பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதத்தால் நாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அங்குள்ள பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அங்கும் அமைதி ஏற்படும்.

நமது தேசியப் பாதுகாப்புப் படையினரால் இதுபோன்ற பயங்கரவாதச் சம்பவங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT