இந்தியா

டி.கே.சிவகுமார் மகளிடம் 7 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக, அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

DIN


கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கு தொடர்பாக, அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். 
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கும் ஐஸ்வர்யா, காலை 10.30 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். இரவு 7.30 மணிக்கு விசாரணை முடிந்து அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 
கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதியப்பட்டது.  கடந்த 2017-ஆம் ஆண்டு சிவகுமாரும், ஐஸ்வர்யாவும் சிங்கப்பூர் சென்றது தொடர்பாக முன்பு சிவகுமாரிடம் விசாரணை நடத்தியிருந்தோம்.  அப்போது அவர் அளித்த வாக்குமூலம், சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டது. 
மேலும், ஐஸ்வர்யா தனது தரப்பிலிருந்து தனிப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். சிவகுமாரால் தொடங்கப்பட்டு, ஐஸ்வர்யா அறங்காவலராக இருக்கும் கல்வி அறக்கட்டளையின் கீழ் பல கல்லூரிகள் இயங்குகின்றன. அந்த அறக்கட்டளையின் சொத்து மற்றும் வர்த்தக மதிப்பு கோடிகளில் உள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர். 
கருப்புப் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவகுமார், தற்போது அந்த அமைப்பின் காவலில் இருக்கிறார். 9 நாள் அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் அவர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT