இந்தியா

நாடு முழுவதும் பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் 389 மாவட்டங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தலா 100 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

Muthumari

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 389 மாவட்டங்களில் தலா 100 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மொத்தமாக 1.66 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவை என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் 100 வழக்குகளைத் தாண்டிய மாவட்டங்கள் 389 என கணக்கிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் போக்ஸோ(POCSO) சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள். எனவே, இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் விரைவு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்படும் இந்த நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளைத் தவிர வேறு எந்த வழக்குகளையும் இந்த நீதிமன்றங்கள் விசாரிக்காது. அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஒரு மாநிலத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மொத்தமாக 1.66 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. ஆண்டுக்கு 165 வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களின் மூலமாக தீர்த்து வைக்கப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களை அமைக்கும் பணியானது வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் வாக்களிப்பு!

நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?

வயதான தாயை தூக்கிவந்து வாக்களிக்க வைத்த மகன்! | Bihar | Election

என்னை இந்தியராக சித்தரித்து மோசடி! ஹரியாணா வாக்காளராக இடம்பெற்ற பிரேசில் மாடல்!

SCROLL FOR NEXT