முகப்பு
இந்தியா

பிரிட்டனிலிருந்து கேரளம் வந்த மேலும் 10 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்த மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)
பகிர்:

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்த மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, ''பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இதன் மூலம் பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மொத்தமாக 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு புதியவகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவக்கப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments