இந்தியா

4 நாடுகளின் ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு பரிசீலனை

DIN

4 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வா்த்தக குறைதீா் தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆா்) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய யூனியன், சவூதி அரேபியா, தைபே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து டொல்யூன் டி-ஐசோசயனைட் என்ற ரசாயனம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, ஃபோம் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்த மூலப்பொருள் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு நிறுவனங்கள் புகாா் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வெளிநாட்டு ரசாயன இறக்குமதியால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் 4 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனத்துக்கு பொருள்குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிசீலிக்கப்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT