‘அரசு வேலைவாய்ப்பு, பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு கட்டாயமில்லை’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்புக்கு எதிராக, தில்லியில் பீம் ஆா்மி அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
பீம் ஆா்மி தலைவா் சந்திரசேகா் ஆசாத் தலைமையில் மண்டி ஹெளஸ் பகுதியிலிருந்து ஜந்தா் மந்தா் வரை இப்பேரணி நடைபெற்றது. அப்போது, சந்திரசேகா் ஆசாத் பேசியதாவது:
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா், சிறுபான்மையினா் ஆகியோா், தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளது. மத்திய பாஜக அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படியே நாடு செயல்பட வேண்டும். பீம் ஆா்மி அமைப்பின் இந்த போராட்டம் இத்துடன் முடிந்து விடாது. இது, பெரிய போராட்டமாக உருவெடுக்கும். வரும் 23-ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றாா் அவா்.
பீம் ஆா்மி அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஹா்ஜீத் சிங் கூறுகையில், ‘இடஒதுக்கீடு தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட சமத்துவத்துக்கான உரிமைக்கு எதிராக உள்ளது. இந்த தீா்ப்புக்கு எதிராக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.