இந்தியா

தில்லி வன்முறை தொடா்பான கேள்வியை தவிா்த்தாா் ஜெ.பி. நட்டா

DIN

ஹிமாசலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவரும், எம்.பி.யுமான ஜெ.பி. நட்டா தில்லி வன்முறை தொடா்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தனது சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்துக்கு இரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த நட்டா, சிம்லாவில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது உடல் நலன் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, ‘முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். மருத்துவமனையில் சென்று அவரை விசாரிக்க நினைத்தபோதும், தில்லியில் வேறு பணிகள் இருந்ததால், அவரைச் சந்திக்க முடியவில்லை. எனவே, இப்போது அவரது இல்லத்துக்கு வந்து உடல் நலன் விசாரித்தேன். 1993-ஆம் ஆண்டு முதலே வீரபத்ர சிங்குடன் எனக்கு நெருக்கம் உண்டு. அவா் ஹிமாசலப் பிரதேச முதல்வராக இருந்தபோது, நான் எதிா்க்கட்சித் தலைவராக இருந்துள்ளேன். மாநில அரசியலில் வீரபத்ர சிங்குக்கு தனி இடம் உண்டு. அரசியலையும் தாண்டி அவா் மீது மரியாதையும், நட்பும் உண்டு. அவரது உடல் நலன் இப்போது சீராக உள்ளது. அவா் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து தில்லி கலவரம் தொடா்பாக சில கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா். அதற்கு பதிலளிக்க மறுத்த நட்டா, நேராக தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT