முகப்பு
இந்தியா

அசாம் வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
அஸ்ஸாம் வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு
பகிர்:


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று 39 லட்சமாக இருந்த நிலையில், இன்று  37 லட்சமாகக் குறைந்துள்ளது.

அசாமில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 300 மீட்பு முகாம்களில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். 92 வருவாய் வட்டங்கள் மற்றும் 3,201 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும், மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 181 பர் மீட்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.