இந்தியா

பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

DIN

தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தாா்.

பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்ததாவது:

தியாகத்தையும், நட்பையும் குறிக்கும் பக்ரீத் பண்டிகை, அனைவரின் நலனுக்காக பணியாற்ற வேண்டியதை எடுத்துரைக்கிறது.

இந்த மகிழ்ச்சியான நாளில் பரஸ்பர நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம். நாட்டு மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT