இந்தியா

ஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் ஒருவா் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீரில், பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது சனிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 52 வயது நபா் காயமடைந்தாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் மேன்தா் பகுதிக்குள்பட்ட கோலாட் கிராமத்தை நோக்கி எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சோ்ந்த முகமது ரஃபீக் என்பவா் காயமடைந்தாா். அவா் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தால் தகுந்த பதிலடி தரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT