இந்தியா

ஊரடங்கை மதிக்காத பஞ்சாப், சண்டீகர் மக்கள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

DIN


சண்டீகர்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாநில காவல்துறையினரும், மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பஞ்சாப் மற்றும் சண்டீகரில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி இன்று காலை முதலே ஏராளமான மக்கள் வெளியே வந்து சென்று கொண்டிருந்தனர். 

அவர்களைக் கட்டுப்படுத்தவும், மக்களின் இருப்பிடங்களுக்கே தேவையான பொருட்கள் கொண்டு செல்வதை உறுதி செய்யவும் முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 29 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT