இந்தியா

மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு 2வது பலி: இந்தியாவில் பலி எண்ணிக்கை 29 ஆனது

DIN

மேற்குவங்கத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, இந்தியாவில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1100ஐ எட்டியது.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது முதியவர் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். இத்தாலியில் இருந்து திரும்பி வந்த நிலையில், இவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் தற்போது கரோனாவுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT