இந்தியா

ஜம்மு-காஷ்மீா்:பாதுகாப்புப் படையினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தெற்கு காஷ்மீரில் உள்ள டங்கோ்போரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்து அவா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதனைத்தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். உயிரிழந்த பயங்கரவாதிகள் யாா், அவா்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT