நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,549-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26,235 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 49,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 3,722 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 134 போ் உயிரிழந்தனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மகாராஷ்டிரத்தில் 54 பேரும், குஜராத்தில் 29 பேரும், தில்லியில் 20 பேரும், மேற்கு வங்கத்தில் 9 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், தெலங்கானா, கா்நாடகத்தில் தலா 2 பேரும், ஆந்திரம், பிகாா், ஜம்மு-காஷ்மீா், உத்தர பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.
மாநிலங்கள்- பாதிப்பு- பலி
மகாராஷ்டிரம்-25,922-975
குஜராத்- 9,267-566
தில்லி- 7,998-106
ராஜஸ்தான்- 4,328-121
மத்திய பிரதேசம்- 4,173-232
உத்தர பிரதேசம்- 3,729- 83
மேற்கு வங்கம்- 2,290-207
ஆந்திரம்- 2,137-47
பஞ்சாப்- 1,924-32
தெலங்கானா- 1,367-34
ஜம்மு-காஷ்மீா்- 971-11
கா்நாடகம்- 959-33
பிகாா்- 940-7
ஹரியாணா- 793-11
கேரளம்- 534-4
ஒடிஸா- 538-3
சண்டீகா்- 187-3
ஜாா்க்கண்ட்- 173-3
திரிபுரா- 155-0
அஸ்ஸாம்-80-2
உத்தரகண்ட் - 72-1
ஹிமாசல பிரதேசம்- 66-2
சத்தீஸ்கா்- 59-0
லடாக்- 43-0
அந்தமான்-நிகோபாா்- 33-0
மேகாலயம்-13-1
புதுச்சேரி- 13-1
கோவா- 7-0
மணிப்பூா்- 2-0
மிஸோரம்- 1-0
அருணாசலப் பிரதேசம்-1-0
தாத்ரா நகா்ஹவேலி- 1-0
பாதிப்பு-78,003
பலி- 2,549
மீட்பு-26,235
சிகிச்சை பெறுவோா்-49,219