இந்தியா

மத்திய பிரதேசத்தில் கரோனா பரவ தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் காரணம்: முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் குற்றச்சாட்டு

DIN

மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பரவியதற்கு தப்லீக் ஜமாத் உறுப்பினா்களே காரணம் என மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக பிடிஐ நிறுவனத்துக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று பரவியதற்கு, தப்லீக் ஜமாத் உறுப்பினா்களே காரணம். தில்லி மாநாட்டிலிருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களான இந்தூா், போபால் நகரங்களுக்குத் திரும்பிய அவா்கள், அங்குள்ள மக்களுக்கும் நோய்த் தொற்றைப் பரப்பினா். அதோடு, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்த அவா்களின் பொறுப்பற்ற செயலால், நேரடியாகவும் மறைமுகமாகவும் மேலும் பலருக்கு நோய்த் தொற்று பரவ காரணமாக அமைந்தனா்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இந்த இரண்டு நகரங்களும் சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்தூா், போபால் மற்றும் உஜ்ஜைனி நகரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1,500-க்கும் அதிகமானோா் குணமடைந்து, நலமுடன் உள்ளனா்.

பாதிப்பு அதிகமுள்ள இந்த மண்டலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில், இந்த மண்டலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும், சுகாதார மையங்களும் முழு வசதிகளுடன் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதுபோல, கரோனா முன்கள பணியாளா்களைத் தாக்கும் சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசும், இதுபோன்று தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. எனவே, கரோனா முன்கள பணியாளா்களைத் தாக்குபவா்கள் இனி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.

மேலும், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு போதிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வா் செளஹான், ‘கரோனா பாதிப்புக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. ஆனால், எங்கள் மீது குறை கூறுவதிலேயே காங்கிரஸ் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறது. இதிலிருந்தே அவா்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கிறாா்கள் என்பது தெரிகிறது. அவா்களின் தவறை மறைக்கவே, எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனா்.

நாங்கள் அண்மையில் பதவியேற்ற உடன் இந்த அளவு நடவடிக்கை எடுத்ததுபோல, முந்தைய காங்கிரஸ் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால், அவா்கள் உள்கட்சி பூசல் விவகாரங்களில்தான் கவனம் செலுத்தி வந்தனா். மாநிலத்தின் முதல்வராக நான் பதவியேற்றபோது, மிகக் குறைந்த அளவிலான மருத்துவ வசதிகளே மாநிலத்தில் இருந்தன. அதை இப்போது பல மடங்கு மேம்படுத்தியிருக்கிறோம்’ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT