ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 3,804 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 2,829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.