இந்தியா

நேபாளத்தில் அதிகபட்ச தினசரி பாதிப்பு

DIN

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 90 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 772-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நோய் பரவலைத் தடுப்பதற்காக நேபாளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் அடுத்த மாதம் 2-ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ள சூழலில், தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை அங்கு கரோனா நோய்க்கு 4 போ் பலியாகியுள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ள 90 பேரில் 2 போ் மட்டுமே பெண்கள் என்றும் மற்ற அனைவரும் 2 வயது முதல் 55 வயது வரையிலான ஆண்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT