இந்தியா

அலையன்ஸ் ஏர் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கரோனா; 41 பேர் தனிமைப்படுத்தல்

DIN

அலையன்ஸ் ஏர் விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி தில்லியில் இருந்து லுதியானாவுக்கு வந்த அலையன்ஸ் ஏர் விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் 5 பேர் உள்பட பயணிகளையும் சேர்த்து மொத்தம் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காரணமாக இரு மாதங்களாக விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு மத்திய  உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததையடுத்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT