முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் புதிதாக 2,562 பேருக்கு கரோனா; 30 பேர் பலி

ஹரியாணாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் பலியாகினர்.

Updated On : 18 நவம்பர், 2020 at 9:27 PM
ஹரியாணாவில் புதிதாக 2,562 பேருக்கு கரோனா; 30 பேர் பலி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM

ஹரியாணாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஹரியாணா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,562 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,039-ஆக அதிகரித்துள்ளது.

 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19,543 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,85,403-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 30 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,093-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.