இந்தியா

துங்கபத்ரா புஷ்கரம் திருவிழா இன்று முதல் தொடக்கம்

ANI

கர்னூலில் துங்கபத்ரா புஷ்கரம் திருவிழாவை இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. 

12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் துங்கபத்ரா புஷ்கரம் விழா இன்று முதல் தொடர்ந்து 12 நாள்கள் (டிசம்பர் 1 வரை) நடைபெறுகிறது. 

இந்த புஷ்கர விழாவில் இந்திராகரன் ரெட்டி(சட்டம்), நிரஞ்சன் ரெட்டி(வேளாண்மை) மற்றும் வி.ஸ்ரீனிவாஸ் கௌட்(கலால்) ஆகிய அமைச்சர்கள் ஆற்றில் புனித நீராடி மகிழ்ந்தனர். 

கரோனா தொற்று காரணமாக புஷ்கரத்தில் புனித நீராடவும், ஆலம்பூர் மற்றும் பிற இடங்களில் உள்ள கோயில்களைப் பார்வையிட விரும்பும் பக்தர்களுக்கு மாநில அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புஷ்கரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புஷ்கருக்கு வரும் பக்தர்கள் கரோனா எதிர்மறை சான்றிதழ் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், பக்தர்கள் அனைவரும் வெப்ப சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். புஷ்கரத்தில் நீராட முகக்கவசம் அணிவது மற்றும் ஆறு அடி சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT