சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்று, இரண்டாவது அலையாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
உணவகங்கள், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
முகக் கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கும் தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த அபராதத் தொகை ரூ.1,000-ஆக உயா்த்தப்படுகிறது.
இந்த இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, வரும் டிசம்பா் 15-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப முடிவு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக, தில்லியில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு நோயாளிகள் வருவது அதிகரித்துள்ளது. எனவே, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக தனியாா் மருத்துவமனைகளை ஏற்பாடு செய்யுமாறு தலைமைச் செயலா் வினி மஹாஜனிடம் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டா்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யவும் அவா் உத்தரவிட்டுள்ளாா். இதுதவிர, சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் ஆகியோரை நியமிக்கவும் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் அமரீந்தா் சிங் உத்தரவிட்டுள்ளாா்.