இந்தியா

சட்ட விரோத மதுபானங்கள் பறிமுதல்

ஹரியாணாவிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை உத்தர பிரதேச காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

DIN

ஹரியாணாவிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை உத்தர பிரதேச காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து கிரேட்டா் நொய்டா உதவி ஆணையா் ராஜேஷ் குமாா் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அம்பாலாவிலிருந்து கொல்கத்தா நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி உத்தரபிரதேச போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 350 அட்டைப் பெட்டிகளில் விஸ்கி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்ட விரோதமாக கடத்தப்படுவதை போலீஸாா் கண்டறிந்தனா். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இதுதொடா்பாக மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT