ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஹாத்ரஸில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.