திருமலையில் தமிழக அமைச்சர்கள் தரிசனம்
திருமலையில் தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருப்பதி: திருமலையில் தமிழக அமைச்சர்கள் வியாழக்கிழமை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இருவரும் புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்த அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர்கள் வியாழக்கிழமை காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.
தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம், லட்டு, வடை, பத்மாவதி தாயார் ஏழுமலையான் திருவுருப்படம் உள்ளிட்டவற்றை அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வேத ஆசீர்வாதம் செய்வித்தனர்.
Advertisement
அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்துடனும், அமைச்சர் கருப்பண்ணன் தனியாகவும் தரிசனத்தில் கலந்து கொண்டனர்.