இந்தியா

ஜார்க்கண்டில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா

DIN

ஜார்க்கண்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 5 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 1,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,079-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 15,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 42,115 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 5 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 517-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT