இந்தியா

கேரளத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு

DIN


கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,66,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50,000 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,799 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 21 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,14,530 பேர் குணமடைந்துள்ளனர். 

புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 68 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 177 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 6,668 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,446 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை - 5,376
வியாழக்கிழமை - 6,324
வெள்ளிக்கிழமை - 6,477
இன்று (சனிக்கிழமை) - 7,006 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடன்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

உடன்குடி மகளிா் அரபுக் கல்லூரியில் முப்பெரும் விழா

காலங்குடியிருப்பு அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

243 ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு: ஐசிஏஆா் ஆய்வறிக்கை உறுதி

18இல் தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: ஆட்சியா்

SCROLL FOR NEXT